Published : 21 Aug 2020 09:14 PM
Last Updated : 21 Aug 2020 09:14 PM
ஊரடங்கு இல்லாமலும் ஐரோப்பாவால் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “ ஐரோப்ப நாடுகள் ஊரடங்கு இல்லாமலும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும். ஏனெனில் அதிகாரிகள் கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான போதிய திறனைக் கொண்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரோனா வைரஸை கட்டுபடுத்திக் கொண்டே பொருளாதாரத்தை சிறப்பாக இயக்கலாம் என்று உலக சுகாதார அமைப்புக்கான ஐரோப்பா கிளையின் தலைவர் ஹன்ஸ் குல்ஜ் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் அங்கு கரோனா பரவல் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் 2.2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT