Published : 20 Aug 2020 12:18 PM
Last Updated : 20 Aug 2020 12:18 PM

அர்ஜெண்டினாவில் கரோனா தொற்று 3,12,659 ஆக அதிகரிப்பு

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6,693 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அர்ஜெண்டினா சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “ அர்ஜெண்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,693 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அர்ஜெண்டினாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,12,659 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை கரோனாவுக்கு அர்ஜெண்டினாவில் 6,840 பேர் பலியாகி உள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினாவில் சமீபத்தில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டதால்தான் கரோனா மீண்டும் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் சுமார் 2 .2 கோடிக்கும் அதிகமான நபர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ், 8 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை முடக்கியுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x