Published : 20 Aug 2020 12:18 PM
Last Updated : 20 Aug 2020 12:18 PM
தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6,693 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அர்ஜெண்டினா சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “ அர்ஜெண்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,693 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அர்ஜெண்டினாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,12,659 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரை கரோனாவுக்கு அர்ஜெண்டினாவில் 6,840 பேர் பலியாகி உள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜெண்டினாவில் சமீபத்தில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டதால்தான் கரோனா மீண்டும் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் சுமார் 2 .2 கோடிக்கும் அதிகமான நபர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ், 8 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை முடக்கியுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT