Published : 19 Aug 2020 08:52 PM
Last Updated : 19 Aug 2020 08:52 PM

சவுதியில் கரோனாவுக்கு 3,506 பேர் பலி

சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து சவுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3,506 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 1,363 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஜாசானில் மட்டும் 109 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். சவுதியில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2, 74,091 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல், தேவையின்றி வெளியே வராமல் இருத்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் கரோனாவுக்கு எதிரான ‘முதல்’ வாக்சினைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x