Published : 18 Aug 2020 10:19 PM
Last Updated : 18 Aug 2020 10:19 PM
நேபாளத்தில் புதிதாக 1,016 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “ நேபாளத்தில் கரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரம் பேர்வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நேபாளத்தில் 1,016 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேபாளத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,257 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 13 , 461 பேருக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கரோனா பரவலை தடுக்க நடவடிக்கையாக எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்த நிலையில் கரோனாவுக்கு எதிரான ‘முதல்’ வாக்சினைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT