Published : 18 Aug 2020 08:44 PM
Last Updated : 18 Aug 2020 08:44 PM
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “ பிலிப்பைன்ஸில் இன்று (செவ்வாய்க்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்து பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் தரப்பில், “ பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகள், சாலைகள் பாதிப்புக்குள்ளாகின. ஏராளமான வீடுகளீல் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலியாகி உள்ளாகி உள்ளார். 6 பேர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிலிப்பைன்ஸில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிலநடுக்கம் காரணமாக 7 பேர் பலியாகினர். 215 பேர் காயமடைந்தனர்.
ரிங் ஆஃப் ஃபயர்
ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் ‘தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு’ என அழைக்கப்படும் பசிபிக் 'ரிங் ஆஃப் ஃபயர்'-ன் ஒரு பகுதி பிலிப்பைன்ஸின் சிறுபகுதியையும் உள்ளடக்கி உள்ளது.
இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் அவ்வப்போது சுனாமி பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT