Published : 14 Aug 2020 08:42 PM
Last Updated : 14 Aug 2020 08:42 PM

ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்தை வாங்க வியட்நாம் ஒப்பந்தம்

ரஷ்யா கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்தை வாங்க வியட்நாம் ஓப்பந்தம் போட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வியட்நாம் அரசு ஊடகம் தரப்பில், “ ரஷ்யாவுடன் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் வியட்நாமும் ஈடுபட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து சுமார் 50 - 150 மில்லியன் டோசஸ் மதிப்புள்ள கரோனா தடுப்பு மருந்தை வாங்க வியட்நாம் அரசு கையெழுத்திட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

வியட்நாமில் டா மாங் பகுதியில் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கரோனா தொற்று பரவ தொடங்கி இருக்கிறது.மேலும் டா மாங் பகுதியில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக்-5

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு பல்வேறு நிலையை எட்டியுள்ளன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் கேய்சர் போன்ற நிறுவனங்கள்தான் கரோனா தடுப்பு மருந்தின் 3-வது கட்டத்தில் நுழைந்து மனிதர்களுக்கான கிளினிக்கல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த சூழலில் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்தது. உலகிலேயே முதல் நாடாக கரோனாவுக்கு தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தார்.

ரஷ்யாவின் கமலேயா தேசிய ஆய்வு மைம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு மற்றும் நுண்ணுயிரியல் பிரிவு ஸ்புட்னிக்-5 எனும் கரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.

இந்த நிலையில் ரஷ்யாவில் தடுப்பு மருந்து பாதுகாப்பானதாக இல்லை என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

ரஷ்யா கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பற்றது என்ற குற்றச்சாட்டை ரஷ்ய அதிபர் புதினும்,அவரது சுகாதாரத் துரை அமைச்சகமும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x