Published : 14 Aug 2020 01:33 PM
Last Updated : 14 Aug 2020 01:33 PM

சீனாவில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று

சீனாவில் புதிதாக 30 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 22 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். மேலும் 28 பேருக்கு எந்தவித அறிகுறி இல்லாமல் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இந்த எண்ணிக்கை 20 ஆக இருந்தது” என்று தெரிவித்துள்ளனர்.

கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் இந்த நோய்த் தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாகக் கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த மாதம் கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பெய்ஜிங்கில் கரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷின்ஜியாங் மாகாணத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் சீனாவின் வூஹான் நகரில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களில் 90% பேர் நுரையீரல் பாதிப்பைச் சந்திக்கின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x