Published : 12 Aug 2020 08:36 PM
Last Updated : 12 Aug 2020 08:36 PM
சோமாலியாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை கூறும்போது, “ ஜும்பா மற்றும் ஷாபெல்லா ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சோமாலியா அரசு எச்சரிக்கை விடுவித்துள்ளது. மேலும் பெரும் வெள்ளம் காரணமாக ஜோஹர் மற்று பெலிடேயேன் நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சோமாலியாவில் நிலவும் காரணமாக கடந்த ஜூன் மாதத்திலிருந்து சுமார் 1 லட்சம் மக்கள் தங்கள் குடியிறுப்புப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் பாம்புகளும், முதலைகளும் சூழ்ந்து இருப்பதால் பாதுகாப்பு கருதி வீடுகளிலிருந்து வெளியேறுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் ஒரு பக்கம் இருக்க, சோமாலிய அரசுக்கு எதிராக அல் கொய்தாவுடன் இணைக்கப்பட்டுள்ள அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தினர் அந்நாட்டில் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் ஹோட்டல்கள் மற்றும் சோதனைச் சாவடிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் சமீபகாலமாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல் ஷபாப் இயக்கத்துக்கு எதிராக அமெரிக்க ராணுவத்தினர் இந்த ஆண்டு முதல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT