Published : 12 Aug 2020 07:17 PM
Last Updated : 12 Aug 2020 07:17 PM

அர்ஜெண்டினாவில் கரோனா பலி 5,000-ஐ தாண்டுகிறது

அர்ஜெண்டினாவில் கரோனா வைரஸினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 5.000-ஐ தாண்டியுள்ளது.

இது குறித்து அர்ஜெண்டினா சுகாதாரத்துறை அமைசசகம் தரப்பில் கூறும்போது '' கடந்த 24 மணி நேரத்தில் அர்ஜெண்டினாவில் 7,043 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இங்கு கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 .6 லட்சத்தை கடந்துள்ளது .மேலும் அர்ஜெண்டினாவில் கரோனாவினால் இதுவரை 5,004 பேர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினாவில் சமீபத்தில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டதால்தான் கரோனா மீண்டும் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் சுமார் 2 கோடிக்கும் அதிகமான நபர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 1,25,85,308 பேர் குணமடைந்துள்ளனர்.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ், 8 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை முடக்கியுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.

கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் ரஷ்யா கரோனாவுக்கு எதிரான ‘முதல்’ வாக்சினை கண்டுபிடித்துள்ளதாகவும் தன் மகளுக்கு முதலில் செலுத்தியதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x