Published : 11 Aug 2020 10:32 AM
Last Updated : 11 Aug 2020 10:32 AM

கரோனா வைரஸுக்கான உடல் பரிசோதனையில் அமெரிக்காவுக்கு பிறகு இந்தியாதான் - அதிபர் ட்ரம்ப் கருத்து

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தாக்கம் ஓய்வதாக இல்லை. அங்கு பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 52 லட்சத்து 51 ஆயிரத்து 446 ஆக உள்ளது., பலி எண்ணிக்கை 166,192 ஆக அதிகரித்துள்ளது, சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 23,69,320.

உலக அளவில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்து விட்டது.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகமாக கரோனா வைரஸ் உடல் பரிசோதனை மேற்கொள்வது இந்தியாதான் என்று கூறியுள்ளார்.

“அமெரிக்காவில் 6.5 கோடி பேருக்கு கரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 11 மில்லியன் பேர் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்தியாவில் 1.50 பில்லியன் (1.38 பில்லியன்) மக்கள் உள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் வாக்சின் வந்து விடும் என்று உறுதியாக நம்புகிறேன்.

சீனா மீது அமெரிக்காவின் விமர்சனத்துக்குக் காரணமே கரோனா வைரஸ்தான். அவர்கள் செய்தது கடும் ஏமாற்றமளிக்கிறது. சீனா நல்ல நாடு கிடையாது. தேர்தலில் வெற்றி பெற்றால் நிச்சயம் ஈரானுடன் நல்ல ஒப்பந்தம் மேற்கொள்வோம், ஆனா சீனாவுடன் கிடையாது” என்றார் ட்ரம்ப்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x