Published : 08 Aug 2020 09:50 PM
Last Updated : 08 Aug 2020 09:50 PM
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கரோனா வைரஸ் பலி 1 லட்சத்தை நெருங்கவுள்ளது.
இதுகுறித்து பிரேசில் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “ பிரேசில் கரோனா தொற்று முதல் முதலில் பிப்ரவரி மாதம் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் முதல் மூன்று மாதங்களில் பிரேசிலில் கரோனாவுக்கு 50,000 பேர் பலியாகினர். அடுத்த 50 நாளில் மற்றுமொரு 50,000 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் தற்போது பிரேசிலில் கரோனா பலி 1 லட்சத்தை எட்டவுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாகவே பிரேசிலில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரேசில் அதிபர் போல்சனாரோ கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று சமீபத்தில் உடல்நலம் தேறினார். இந்நிலையில், அவரின் மனைவிக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது மிச்செல் போல்சனாரோ தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன. பிரேசிலில் இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT