Published : 07 Aug 2020 03:47 PM
Last Updated : 07 Aug 2020 03:47 PM
பாகிஸ்தானில் கரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10 -ம் தேதி தளர்த்தப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் திட்டக் குழு அமைச்சர் அசாத் உமர் கூறும்போது, “ கரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் மாதம் 10 -ம் தேதி முதல் தளர்த்தப்பட உள்ளது. ஓட்டல்கள், பிற கடைகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகளின் விவரம் மூன்று நாட்களில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 2,80,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் கரோனா பரவல் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக்காட்டி, பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்தார்.
இந்த நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால், கரோனா தொற்று அதிகமாக உள்ள பஞ்சாப், சிந்து மாகாணங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசு கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு இறங்கி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT