Published : 06 Aug 2020 07:14 PM
Last Updated : 06 Aug 2020 07:14 PM

லெபனான் செல்கிறார் பிரான்ஸ் அதிபர்

பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்துக்குப் பிறகு மத்திய கிழக்கு நாடுகளுடன் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் நோக்கில் பிரஞ்சு அதிபர் மக்ரோன் லெபனான் வரவிருக்கிறார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் லெபனான் வர இருப்பதாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.

இந்தநிலையில், மக்ரோன் இன்று (வியாழக்கிழமை) லெபனான் செல்ல இருக்கிறார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன் அவசர உதவிகள் மற்றும் மீட்புப் பணி உதவிகளையும் பிரான்ஸ் அரசு அளித்து உதவியுள்ளது.

இந்த நிலையில் மக்ரோனின் லெபனான் பயணம் முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அம்மோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது.

இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு நேற்று வரை 70 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் பலி எண்னிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது. 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

லெபனானில் நடைபெற்ற இந்த வெடி விபத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்துள்ளனர்.

லெபனான் ஏற்கெனவே பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது. இந்த நிலையில் கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் மருத்துவ உதவிகளை லெபனானுக்கு வழங்கியுள்ளன.

இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையும் லெபனான் அரசுக்கு உதவ முன்வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x