Published : 05 Aug 2020 07:46 PM
Last Updated : 05 Aug 2020 07:46 PM

கரோனா பாதிப்பு: பிரேசில் 28 லட்சத்தைக் கடந்தது

பிரேசிலில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 51,603 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்தைக் கடந்துள்ளது.

மேலும், நேற்று மட்டும் 1,154 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை பலி எண்ணிக்கை 95,819 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாகவே பிரேசிலில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று சமீபத்தில் உடல்நலம் தேறினார். இந்நிலையில், அவரின் மனைவிக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது மிச்செல் போல்சனாரோ தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன. பிரேசிலில் இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x