Published : 04 Aug 2020 04:35 PM
Last Updated : 04 Aug 2020 04:35 PM

ரஷ்யாவில் கரோனா தொற்று 8,61,423 ஆக அதிகரிப்பு

ரஷ்யாவில் புதிதாக 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,159 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்திப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா தொற்று 8,61,423 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கரோனாவுக்கு 14 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

உலக அளவில் மொத்தமாக 1.8 கோடி பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிலையில், 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

கரோனா பாதிப்பில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,13,500 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,55,402 ஆகவும் உள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் இதுவரையில் 24 லட்சம் பேருக்கு மேல் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆயிரம் பேர் இறந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.

கரோனா தடுப்பு மருந்துக்கான அனைத்துக் கட்டப் பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x