Published : 03 Aug 2020 09:00 PM
Last Updated : 03 Aug 2020 09:00 PM

கரோனா பாதிப்பு: பள்ளிகள் திறக்கப்படாது - மெக்சிகோ

மெக்சிகோவில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படாது என்று அந்நாட்டு கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெக்சிகோ கல்வித்துறை தரப்பில், “ கரோனா பரவல் அதிகமாக இருப்பதன் காரணமாக மெக்சிகோவில் நடப்பு கல்வி ஆண்டான ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் கரோனாவால் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

உலக அளவில் கரோனா பாதிப்பில் 7-வது இடத்தில் இருந்தாலும், உயிரிழப்பில் 3-வது இடத்துக்கு மெக்சிகோ நகர்ந்துள்ளது.

தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், ஆளும் அரசு முறையாகக் கையாளவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

மெக்சிகோவில் உள்ள மாநிலங்களில் 9 கவர்னர்கள் ஆளும் அரசை கரோனா விவகாரத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x