Published : 03 Aug 2020 03:54 PM
Last Updated : 03 Aug 2020 03:54 PM

ஈரானில் அதிகபட்சமாக 2,600 பேருக்கு புதிதாக கரோனா தொற்று

ஈரானில் ஒரு மாதத்துக்குப் பிறகு அதிகபட்சமாக புதிதாக 2,600 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், “ஈரானில் கடந்த ஒரு மாதம் இல்லாத அளவில் ஞாயிற்றுக்கிழமை 2,600 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஈரானில் 3,09,437 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,190 பேர் கரோனாவுக்கு இதுவரை பலியாகி உள்ளனர். 2,68,102 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித இடங்களில் கூடும் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று மாஸ்க் அணிய வேண்டும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

80 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x