Published : 03 Aug 2020 02:05 PM
Last Updated : 03 Aug 2020 02:05 PM

தென் அமெரிக்க நாடுகளில் கரோனா பாதிப்பு 50 லட்சத்தை நெருங்குகிறது

லத்தீன் அமெரிக்க நாடுகளில் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “லத்தீன் அமெரிக்க நாடுகளில் கரோனா நோய்த்தொற்று 50 லட்சத்தை நெருங்குகிறது. பிரேசிலில் அதிகபட்சமாக 27,33,677 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அர்ஜென்டினாவில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொலம்பியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரு மற்றும் மெக்சிகோவில் கரோனா பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்துள்ளது” என்று செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், உலக அளவில் கரோனா பாதிப்பில் மெக்சிகோ 7-வது இடத்தில் இருந்தாலும், உயிரிழப்பில் 3-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் கரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.

அமெரிக்காவில் 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x