லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு: அமெரிக்க எம்.பி. கண்டனம்

எம்.பி. பிராங்க் பலோன்
எம்.பி. பிராங்க் பலோன்
Updated on
1 min read

அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அவையில் எம்.பி.யான பிராங்க் பலோன் நேற்று முன்தினம் கூறியதாவது:

லடாக் பகுதியில் சீனாவின் அத்துமீறிய நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 1962-ல்நடந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே 2,100 மைல் தூரத்துக்கு உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு ஏற்படுத்தப்பட்டது. அந்த கோட்டைத் தாண்டி சீனா தனது 5 ஆயிரம் ராணுவ வீரர்களை இறக்கியது கண்டிக்கத்தக்கது. இதன்மூலம் சீனாவின் ஆக்கிரமிப்பு வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்றநடவடிக்கைகளில் சீனா ஈடுபடாமல் இருக்க தூதரக அடிப்படையிலான நடவடிக்கையை எடுப்பது தொடர்பாக இந்த அவையில் தீர்மானம் இயற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in