Published : 01 Aug 2020 08:04 PM
Last Updated : 01 Aug 2020 08:04 PM

உக்ரைனில் கரோனா பலி 4,000 - ஐ நெருங்குகிறது

உக்ரைனில் கரோனா பலி எண்ணிக்கை 4,000 -ஐ நெருங்கிறது.

இதுகுறித்து உக்ரைன் செய்தி ஊடகங்கள் தரப்பில், “ ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,172 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உக்ரைனில் கரோனா எண்ணிக்கை 71,056 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 16 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது. 39,308 பேர் குணமடைந்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மொத்தமாக 1. 7 கோடி பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிலையில், 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

கரோனா பாதிப்பில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,06,059 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,56,772 ஆகவும் உள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் இதுவரையில் 24 லட்சம் பேருக்கு மேல் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆயிரம் பேர் இறந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x