Published : 01 Aug 2020 02:40 PM
Last Updated : 01 Aug 2020 02:40 PM
டோக்கியோவில் கரோனா தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்கு புதிதாக 423 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து டோக்கியோ அரசுத் தரப்பில், “ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (சனிக்கிழமை) 472 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டோக்கியோவில் ஜூலை மாதத்தில் மட்டும் 6,466 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டோக்கியோவில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோவில் ஜூலை மாதம் நடுப்பகுதியிலிருந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அங்கு சில நாட்களுக்கு முன்னர் ரெட் அலர்ட் (அவசர நிலை) விடுக்கப்பட்டது.
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு டோக்கியோ வாசிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் உள்ள நாடக அரங்கு ஒன்றில் நாடக உறுப்பினர் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நாடக அரங்கில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் அனைவரையும் பரிசோதனை செய்யும் முயற்சியில் அரசு இறங்கியது.
ஜப்பானில் 36,234 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1,008 பேர் பலியாகியுள்ளனர்.
பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜப்பானில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகம் இல்லையென்றாலும், தற்போது புதிதாகத் தொற்று ஏற்படத் தொடங்கியுள்ள நிலையில், ஜப்பான் அரசு தடுப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT