Published : 31 Jul 2020 02:26 PM
Last Updated : 31 Jul 2020 02:26 PM

கரோனா பரவல் எதிரொலி: சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் சின்ஜியாங் மாகாணத்திற்கான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சீன ஊடகங்கள் தரப்பில், “சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இம்மாகாணத்தில் வெளியேறுபவர்கள் மருந்துவச் சான்றிதழை அளித்த பின்னரே வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 112 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரமான உரும்யூ நகரில் 600க்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தலியன், உரும்கி நகரங்களில் ஜூலை மாதத்திலிருந்து கரோனா பரவல் தீவிரமாக இருப்பதாக சீன மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் இந்த நோய்த்தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாகக் கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த மாதம் கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள ஓர் இறைச்சி சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பெய்ஜிங்கில் கரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சின்ஜியாங் மாகாணத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x