கரோனா இறப்பு குறைந்துள்ளது: சவுதி

கரோனா இறப்பு குறைந்துள்ளது: சவுதி
Updated on
1 min read

சவுதி அரேபியாவில் கரோனா இறப்பு எண்ணிக்கை குறைந்து இருப்பதாக அந்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சவுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், சவுதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கரோனா இறப்பு விகிதம் குறைந்து இருக்கிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சவுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,22,936 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல், தேவையின்றி வெளியே வராமல் இருத்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டினர் மட்டுமன்றி சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களும், புனிதப் பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதித்து சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சவுதி குடிமக்களையும், அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களையும் ஹஜ் பயணம் செய்ய ஜூலை 29 ஆம் தேதி முதல் அனுமதி அளித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in