Published : 25 Jul 2020 09:12 PM
Last Updated : 25 Jul 2020 09:12 PM
வியட்நாமில் 100 நாட்களுக்குப் பிறகு கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை தரப்பில், “வியட்நாமில் தென்பகுதியில் உள்ள தனங் நகரில் புதிதாக ஒருவருக்கு கரோனா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த நபருக்கு சுவாச பிரச்சனை காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த நபருடன் தொடர்பில் இருந்த 100 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது.
கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.
உலகம் முழுவதும் சுமார் 1 .5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். . 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT