

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கரோனா தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அங்கு கரோனாவுக்கு ஒரே நாளில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து விக்டோரியா மாகாண அரசு தரப்பில், “விக்டோரியா மாகாணத்தில் தற்போதைய நிலவரப்படி புதிதாக 300 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விக்டோரியாவில் இதுவரை 7,405 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 41 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மேலும் வருத்தம் அளிக்கக் கூடிய செய்தியாக விக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 7 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாகாணத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதைத் தொடர்ந்து, அங்கு கரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரே ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அங்கு கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 13,306 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 133 பேர் பலியாகி உள்ளனர்.