Published : 24 Jul 2020 12:09 PM
Last Updated : 24 Jul 2020 12:09 PM
சில நாடுகளில் கரோனா பரவல் தீவிரமாக இருப்பதாக உலக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் 5 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளில் பரவி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 1.5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
பிரிட்டன், ரஷ்யா, சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக உள்ளன. இந்த நிலையில் சில நாடுகளில் கரோனா பரவல் தீவிரமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “ஒப்பீட்டளவில் கரோனா வைரஸ் சில நாடுகளில் தீவிரமாக உள்ளது. சிறிய நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. மொத்த கரோனா பரவலில் மூன்றில் இரண்டு பங்கு 10 நாடுகளில் சேர்ந்தவையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கவில் 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT