Published : 22 Jul 2020 09:20 PM
Last Updated : 22 Jul 2020 09:20 PM

மூன்றாவது பரிசோதனையிலும் பிரேசில் அதிபருக்கு கரோனா தொற்று உறுதி

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு செய்யப்பட்ட மூன்றாவது கரோனா பரிசோதனையிலும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 7 ஆம் தேதி பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, அவர் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் தான் விரைவில் பணிக்குச் செல்ல வேண்டும், வீட்டில் தனித்திருக்க முடியவில்லை என்று கூறி போல்சனோரா சில நாட்களுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை செய்துகொண்டார்.

இதன் முடிவில் அவருக்கு கரோனா தொற்று மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் ஜெய்ர் போல்சனோராவுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் முடிவு இன்று வெளியாகியது. இதில் மீண்டும் போல்சினோராவுக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பிரேசில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா தொற்றிலிருந்து இன்னும் போல்சனாரோ மீளவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

எனினும் ஜெய்ர் போல்சனோரா நலமுடன் இருப்பதாகவும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அரசு பணிகளை கவனித்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்து மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா ஏற்கெனவே கூறி வந்தார். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x