விக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 484 பேர் கரோனாவால் பாதிப்பு

விக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 484 பேர் கரோனாவால் பாதிப்பு
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 484 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து விக்டோரியா மாகாணம் அரசு தரப்பில், “ ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான விக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 484 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விக்டோரியாவில் கரோனா பாதிப்பு 6,739 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாகாணத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதைத் தொடர்ந்து, அங்கு கரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரே ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அங்கு கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 12,896 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 128 பேர் பலியாகி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in