

இந்தோனேசியாவில் கரோனா வைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை 4,459 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை தரப்பில், “ இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 139 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4,459 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று 1,882 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தோனேசியாவில் 91,751 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தோனேசியா கரோனாவால் அதிகம் பாதிப்பை சந்தித்துள்ளது. சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.