Published : 20 Jul 2020 05:01 PM
Last Updated : 20 Jul 2020 05:01 PM
ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் கட்டுக்குள் வருவதற்கு சில வாரங்கள் ஆகும் என்று மருத்துவ
நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் மூத்த மருத்துவ அதிகாரியான பால் கெல்லி கூறும்போது, ''ஆஸ்திரேலியாவில் விக்டோரியா உள்ளிட்ட மாகாணங்களில் கரோனா பரவல் தீவிரமாக உள்ளது. இதனால் அங்கு கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர சில வாரங்கள் பிடிக்கும். விக்டோரியாவில் திங்கட்கிழமை (இன்று) 275 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னைத் தொடர்ந்து சிட்னி நகரிலும் கரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது.
2.25 கோடி மக்கள்தொகை கொண்ட ஆஸ்திரேலியாவில் 11,800 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 123 பேர் பலியாகியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கட்டுக்குள் இருந்த கரோனா, கடந்த ஜூன் மாதம் மீண்டும் பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் ஏற்பட்டுள்ள சமூகப் பரவல் காரணமாக பிற மாகாணங்கள் தற்போது நெருக்கடிக்கு உள்ளாயின.
ஆஸ்திரேலியாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் கரோனா பரவல் இரண்டாம் கட்டப் பரவலாக இருக்கக்கூடும் என்ற நிலையில் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்தந்த மாகாண அரசுகள் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT