Published : 20 Jul 2020 11:38 AM
Last Updated : 20 Jul 2020 11:38 AM

பிரேசிலில் கரோனா பலி 80,000-ஐ நெருங்குகிறது

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 80,000-ஐ நெருங்குகிறது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ''பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 716 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதுவரை கரோனாவுக்கு 79,488 பேர் பலியாகியுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் 7,000 பேர் பிரேசிலில் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

மேலும், புதிதாக, 23,529 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,98,389 ஆக அதிகரித்துள்ளது. 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கபட்டுள்ளது.

முன்னதாக, கரோனா பரவலின் மையமாக பிரேசில் விளங்குவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.

உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.

இந்த நிலையில் ரஷ்யா, பிரிட்டன், சீனா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி, இந்தியா, சீனா போன்ற நாடுகள் கரோனாவுக்கான மருந்தைக் கண்டறிவதில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x