Published : 18 Jul 2020 05:22 PM
Last Updated : 18 Jul 2020 05:22 PM

லண்டனில் கறுப்பின இளைஞர் மீது தாக்குதல்: போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

லண்டனில் கறுப்பின இளைஞரின் கழுத்தை இறுக்கியதற்காக போலீஸ் அதிகாரி ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லண்டனின் வடக்குப் பகுதியில் தடை செய்யப்பட்ட ஆயுதத்தை வைத்திருந்த கறுப்பின இளைஞரைத் தாக்கி போலீஸார் அவரது கழுத்தை இறுக்கி கைது செய்ய முற்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளான நபர், 'என் கழுத்தை விடுங்கள்' என்று கத்திய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து காவல் ஆணையர் ஸ்டீவ் ஹவஸ் கூறும்போது, “அந்த வீடியோ காட்சி மிகவும் வருத்தத்தை தரக்கூடியது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு போலீஸ் அதிகாரி பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபோலீஸ் நகரில் கடந்த மாதம் 25-ம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ் அதிகாரி, ஃபிளாய்டைக் கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்துப் பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஜார்ஜ் ஃபிளாய்ட் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து உலகம் முழுவதும் போராட்டம் வெடித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x