Published : 18 Jul 2020 01:42 PM
Last Updated : 18 Jul 2020 01:42 PM
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 2,37,743 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ''உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக 2,37,743 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.4 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும், ஜூலை மாதத்தில் மட்டும் குறைந்தபட்சமாக 5,000 பேர் வரை கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை சுமார் 5,90,000 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT