Published : 16 Jul 2020 04:43 PM
Last Updated : 16 Jul 2020 04:43 PM
தன்னால் இல்லத்தில் தனித்திருக்க முடியவில்லை என்று கூறிய பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா மீண்டும் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். மருத்துவப் பரிசோதனை முடிவில், அவருக்குக் கரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியானது.
ஜூலை 7 ஆம் தேதி பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, அவர் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் தான் விரைவில் பணிக்குச் செல்ல வேண்டும், வீட்டில் தனித்திருக்க முடியவில்லை என்று கூறி போல்சனோரா மீண்டும் கரோனா பரிசோதனை செய்துகொண்டார்.
தான் நலமுடன் இருப்பதாகவும் காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் இல்லை என்றும் பிரேசில் அதிபர் தெரிவித்தார்.
இந்நிலையில் மருத்துவப் பரிசோதனை முடிவில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியானது. இதனை அவரே பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
முன்னதாக, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவப் பரிசோதனை செய்ததில், அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் கரோனா தொற்றிலிருந்து இன்னும் போல்சனாரோ மீளவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
கரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்து மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா ஏற்கெனவே கூறி வந்தார். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT