Published : 15 Jul 2020 04:17 PM
Last Updated : 15 Jul 2020 04:17 PM

ரஷ்யாவில் கரோனா பலி 11,770 ஆக அதிகரிப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 175 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து ரஷ்ய நோய்த் தடுப்பு மையம் தரப்பில், “ரஷ்யாவில் 85 மாகாணங்களில் 24 மணி நேரத்தில் 6,422 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,46,369 ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவில் அதிகபட்சமாக மாஸ்கோவில் நேற்று மட்டும் 628 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 175 பேர் பலியாகினர். ரஷ்யாவில் கரோனாவுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 11,770 ஆகப் பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் கடந்த ஒரு மாதமாகவே ஒவ்வொரு நாளும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் மாஸ்கோவில் கரோனா பரவல் இருந்தாலும் அங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x