Published : 14 Jul 2020 06:26 PM
Last Updated : 14 Jul 2020 06:26 PM

அமெரிக்காவில்தான் அதிக கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன: அதிபர் ட்ரம்ப் தகவல்

உலகின் அதிகப்படியான கரோனா பரிசோதனைகளை அமெரிக்காதான் நடத்தியுள்ளது. மிகக் குறைந்த இறப்பு விகித்தையும் கொண்டுள்ளது என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “உலகின் பெரிய நாடுகளான ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகளைவிட அதிகப்படியான கரோனா பரிசோதனைகளை அமெரிக்காதான் நடத்தியுள்ளது . நாம் மற்றவர்களைவிட அதிக பரிசோதனைகளை நடத்தியுள்ளோம். நீங்கள் பரிசோதனைகளைச் செய்யும்போதுதான் கரோனாவை உறுதிப்படுத்த முடியும். மேலும், கரோனா இறப்பு விகிதம் அமெரிக்காவில்தான் குறைவு” என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் கரோனா வைரஸால் இதுவரை 34,79,483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,35,582 பேர் பலியாகி உள்ளனர்.

உலக அளவில் கரோனா தொற்று மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஒரு வாரமாக 60,000 வரை கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

கரோனா பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்தது.

குறிப்பாக கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x