Published : 14 Jul 2020 03:54 PM
Last Updated : 14 Jul 2020 03:54 PM

ஜப்பானில் மீண்டும் கரோனா பரவல்

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் உள்ள நாடக அரங்கு ஒன்றில் நாடக உறுப்பினர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அந்த நாடக அரங்கங்களில் சமீப நாட்களில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் அனைவரையும் பரிசோதை செய்யும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.

ஷின்ஜுகு நகரில் உள்ள மோலியர் தியேட்டரில் கடந்த சில நாட்களாக நாடகம் அரேங்கற்றப்பட்டது. அதில் நடித்த நபர்களிடையே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடக நிகழ்வில் கலந்துகொண்ட பார்வையாளர்களை அனைவரும் பரிசோதிக்கப்பட உள்ளனர்.

டோக்கியாவில் நேற்று மட்டும் 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் 23,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1000 பேர் பலியாகி உள்ளனர்.

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜப்பானில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகம் இல்லையென்றாலும், தற்போது புதிதாக தொற்று ஏற்பட தொடங்கியுள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.

தற்போது ஜப்பானில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தபோதிலும், ஊரடங்கு கட்டுப்பாட்டை முழுமையாக நீக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. தலைநகர் டோக்கியோவில் உள்ள மிகப் பெரிய பன்னாட்டு விமான நிலையமான நரிதாவில் இரண்டாவது ஒடுதளத்தை அடுத்த வாரத்தில் திறக்க ஐப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x