பாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 5,197 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 5,197 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

பாகிஸ்தானில் கரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 5,197 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,521 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,48,872 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5,197 பேர் பலியாகியுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை கரோனா பாதிப்பு பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் அதிகமாக ஏற்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தில் 1,03,836 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் 86,556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் கரோனா பரவல் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக்காட்டி, அதிபர் இம்ரான்கான் ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்தார்.

இந்த நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால், கரோனா தொற்று அதிகமாக உள்ள மாகாணங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, வணிக நிறுவனங்கள் வாரத்திற்கு 5 நாட்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருந்துக் கடைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் ஆகியவற்றைத் திறக்க அனுமதி அளிக்கவில்லை. அதேபோல் மதக் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in