Published : 10 Jul 2020 09:03 PM
Last Updated : 10 Jul 2020 09:03 PM

ரஷ்யாவில் கரோனா பலி 11,000-ஐ கடந்தது

ரஷ்யாவில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11,000 -ஐ கடந்தது.

இதுகுறித்து ரஷ்யாவில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 174 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 11,017 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 6, 635 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. ரஷ்யாவில் சுமார் 7,13,936 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இதுவரை 4 லட்சத்துக்கு அதிகமானவர்கள் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். ரஷ்யாவில் கடந்த ஒரு மாதமாகவே ஒவ்வொரு நாளும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் மாஸ்கோவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளது. கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடாமல் திணறி வருகின்றன.

இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x