Published : 09 Jul 2020 08:15 PM
Last Updated : 09 Jul 2020 08:15 PM

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அரசின் சேவைகள் மறுக்கப்படும்: ஈரான்

முகக்கவசம் அணியாத ஈரானியர்களுக்கு அரசின் சேவைகள் மறுக்கப்படும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

ஈரானில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் கூறுகையில், “ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,079 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,50,458 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று மட்டும் கரோனாவுக்கு 221 பேர் உயிரிழந்துள்லனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 12,305 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரான், கரோனா தொற்றால் அதிகமாக பாதிப்புக்குள்ளாகி உள்ளது. பொருளாதாரத் தேவைகளுக்காக சமீபத்தில்தான் ஈரான் ஊரடங்கைத் தளர்த்தியது. இந்த நிலையில் கரோனா தொற்று தற்போது ஈரானில் தீவிரமடைந்துள்ளது.

இந்த சூழலில், முகக்கவசம் அணியாத ஈரானியர்களுக்கு அரசின் சேவைகள் மறுக்கப்படும் என்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாத நிறுவனங்கள் ஒருவாரம் மூடப்படும் என்று அந்நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலையில் ஈரான் தலைநகரில் மட்டும் 20 சதவீதம் பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ஈரான் கரோனா தடுப்புப் பணிக்குழுவின் தலைவர் அலிரேஸா சாலி தெரிவித்திருந்தார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஊரடங்குத் தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x