Published : 09 Jul 2020 11:04 AM
Last Updated : 09 Jul 2020 11:04 AM
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 126 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 44,517 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ பிரிட்டனில் சுமார் 630 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று 581 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. பிரிட்டனில் இதுவரை 2,86,979 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பிரிட்டனில் 126 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரிட்டனில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 44,517 ஆக அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் இதுவரை 11,041,203 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கரோனா தொற்று சற்று குறைந்த நிலையில், அங்கு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் பிரிட்டனில் சுற்றுலாவுக்கான மாதம். இந்நிலையில் இந்தக் கட்டுபாடு விமர்சனத்துக்கு உள்ளானது.
முன்னதாக, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளைத் தனிமைப்படுத்துவதாகக் கூறப்பட்டது. இதில் அயர்லாந்து தவிர்த்து பிற நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வரும் பயணிகள் 14 நாட்களுக்குத் தனித்து இருக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT