Published : 29 Jun 2020 12:26 PM
Last Updated : 29 Jun 2020 12:26 PM
சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் பலத்த வெள்ளம் ஏற்பட்டதில் 12 பேர் பலியாகினர்.
இதுகுறித்து சீன அதிகாரிகள் தரப்பில், “சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்திற்கு இதுவரை 12 பேர் பலியான நிலையில் 10 பேர் மாயமாகியுள்ளனர்.
ஷிஹாய் நகரில் வெள்ளப் பெருக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சுமார் 7,000க்கும் அதிகமான குடும்பங்கள் இப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக அமெரிக்க மதிப்பில் 3.5 பில்லியன் டாலர் என்ற அளவில் பொருளாதாரச் சேதம் ஏற்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் ஜூன் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இதுவரை 78 பேர் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT