Published : 26 Jun 2020 07:48 PM
Last Updated : 26 Jun 2020 07:48 PM

தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று: ஈரானில் கரோனா பலி எண்ணிக்கை 10,239 ஆக அதிகரிப்பு

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 109 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளளனர். அங்கு கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 10,239 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், “ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,628 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.17 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதுவரையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 109 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ள நிலையில் அங்கு கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 10,239 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் கடந்த எட்டு தினங்களாக தினமும் 100 பேர் என்ற எண்ணிக்கையில் கரோனா பலி பதிவாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தின் மத்தியில் ஊரடங்குக் கட்டுப்பாட்டை ஈரான் அரசு தளர்த்தியது. அதைத் தொடர்ந்து திருமண நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுகளில் மக்கள் கூட்டமாகப் பங்கேற்கத் தொடங்கினர். இந்நிலையில் தற்போது அத்தகைய கூட்டங்களில் கலந்து கொண்டவர்களிடையே தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலையில் ஈரான் தலைநகரில் மட்டும் 20 சதவீதம் பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ஈரான் கரோனா தடுப்புப் பணிக்குழுவின் தலைவர் அலிரேஸா சாலி கூறியுள்ளார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஊரடங்குத் தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுவெளியில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது குறித்துப் பரிசீலித்து வருவதாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கடந்த வாரம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x