Published : 26 Jun 2020 12:47 PM
Last Updated : 26 Jun 2020 12:47 PM

அதிகரிக்கும் கரோனா: மீண்டும் முடக்க நடவடிக்கையில் டெக்சாஸ் மாகாணம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரே நாளில் 6,000 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடந்து அங்கு முடக்க நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா பரவல் நீடித்து வந்த போதிலும் கடந்த மாதத்தில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்தது.

குறிப்பாக, ப்ளோரிடோ, டெக்சாஸ், அரிசோனா ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

இந்த நிலையில் டெக்சாஸில் வியாழக்கிழமையன்று ஒரே நாளில் 6,000-க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா தொற்றைத் தடுக்க பழைய ஊரடங்கு முறையைப் பின்பற்ற டெக்சாஸ் மாகாண அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து டெக்சாஸ் மாகாண அரசுத் தரப்பில், “இந்தத் தற்காலிகமான நிறுத்தம் கரோனா பரவலை தடுக்கும். மேலும் பொருளாதார வளர்ச்சியின் அடுத்தகட்ட நுழைவுக்கு இந்த நடவடிக்கை உதவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனா தொற்று எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதுவரையில் 24 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.24 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிவதில்லை. இதன் காரணமாகவே அமெரிக்காவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x