Published : 24 Jun 2020 10:57 AM
Last Updated : 24 Jun 2020 10:57 AM

கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 1,33,000 பேர் பாதிப்பு ; 3,847 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் சுமார் 1,33,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “ கரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் உச்சம் அடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் சுமார் 1,33,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,847 பேர்வரை பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனாவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 4, 69, 587 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 90 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உலகம் முழுவது பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று மற்றும் இறப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆபத்தான கட்டத்தில் உள்ள கரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்றும் திறன் கொண்ட டெக்ஸாமெதாசோன் மாத்திரைகளை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x