Published : 23 Jun 2020 05:37 PM
Last Updated : 23 Jun 2020 05:37 PM
குறைவான பரிசோதனையில் குறைவான கரோனா தொற்று எண்ணிக்கையை நாங்கள் காண்பிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஒருவாரமாக அரிசோனா, டெக்சாஸ் உள்ளிட்ட 23 மாகாணங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த வாரத்தில் மட்டும் 5,000 இறப்புகள் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க மாகாணங்கள் இறங்கி உள்ளன.
இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் ட்ரம்ப் கடுமையாக எதிர்க் கட்சிகளால் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.
தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப்,” அமெரிக்காவில் கரோனா தொற்று அதிகரித்தே வருகிறது. ஏனென்றால் நாங்கள் பிற நாடுகளை காட்டிலும் அதிகமாக பரிசோதனைகளை செய்கிறோம். குறைவான பரிசோதனையில் நாங்களும் குறைவான எண்ணிக்கையை காண்பிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் ட்ரம்ப் பதிவுக்கு கீழே பொறுப்பற்ற அதிபர் என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.
அமெரிக்காவில் சுமார் 23, 12,302 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். தொற்று மற்றும் இறப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் பிரேசில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT