Published : 23 Jun 2020 01:45 PM
Last Updated : 23 Jun 2020 01:45 PM
உலக முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 91,00,994 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைகழகம் கூறும்போது, “உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 91,00,994 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 49 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் சுமார் 23, 12,302 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் 11, 06,470 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.
தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பு தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால்,பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கான பல்வேறு முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT