Published : 20 Jun 2020 01:47 PM
Last Updated : 20 Jun 2020 01:47 PM

சீனாவில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று

சீனாவில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “சீனாவில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 22 பேர் பெய்ஜிங்கைச் சேர்ந்தவர்கள். மேலும், இதில் 7 பேருக்கு கரோனாவுக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. எந்தவித அறிகுறியும் இல்லாமல் சமீபத்தில் 108 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 57 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் சுமார் 83,352 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இதில் 4,634 பேர் பலியாகியுள்ளனர். 78,410 பேர் குணமடைந்துள்ளனர்.

பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற ஜின்ஃபாடி மொத்த காய்கறிச் சந்தைக்குச் சென்று வந்தவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்தச் சந்தை மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கரோனா வைரஸ் பரவும் அச்சம் சூழ்ந்ததால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துச் சேவை முடக்கப்பட்டுள்ளதுடன் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

மேலும், மக்களுக்குப் பரிசோதனையை அதிகப்படுத்தியுள்ள சீன அரசு, இதுவரை 90 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குப் பரிசோதனையை நடத்தியுள்ளது. சீனாவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை தொடங்கிய உணர்வை பெய்ஜிங் சூழல் ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x