Published : 17 Jun 2020 04:53 PM
Last Updated : 17 Jun 2020 04:53 PM
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5,839 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தரப்பில், “ பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5,839 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,54,760 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,975 பேர் பலியாகி உள்ளனர். 58, 437 பேர் குணமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் அதிகபட்சமாக பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் கரோனா தொற்று அதிகமாக உள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் 58, 329 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிந்து மாகாணத்தில் 57, 868 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாத இறுதியில் பாகிஸ்தானில் கரோனா தொற்று தற்போதுள்ள எண்ணிக்கையை விட இரு மடங்காக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்தான் கரோனா வைரஸ் உச்சத்தை அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாகிஸ்தானில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் ஊரடங்கை அமல்படுத்துமாறு எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் பொருளாதாரத்தை காரணம் காட்டி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தவிர்த்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT