Published : 16 Jun 2020 03:29 PM
Last Updated : 16 Jun 2020 03:29 PM

பிரிட்டனில் கரோனா இறப்பு 50 ஆயிரத்தைக் கடந்திருக்கலாம்: ஆய்வில் தகவல்

பிரிட்டனில் கரோனா இறப்பு 50 ஆயிரத்தைக் கடந்திருக்கலாம் என்று சர்வதேச அளவில் செயல்படும் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வு குறித்து அச்செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், “கரோனா வைரஸ் காரணமாக பிரிட்டன் பெரும் உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளது. பிரிட்டனில் மட்டும் சுமார் 53,077 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகி உள்ளனர். இதில் சந்தேகத்துக்குரிய மரணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளின் மருத்துவமனைகளில் சமீபத்தில் நடத்த இறப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிரிட்டன் அரசு இதுவரை கரோனாவால் 41,736 பேர் பலியாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இதுவரை 2,96,857 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் இதுவரை 81,18,671 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4,39,198 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 8 வாரங்களில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகள் இரு மடங்காகி உள்ளன.

மேலும் 42,16,319 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x